அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 13

இனி தத்பக்தாபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும், கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து அவரைக் கோயிலிலே குடியிருக்கவொண்ணாதபடி கடலைக் கலக்கினாப்போலே பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில்நின்றும் புறப்பட்டுத் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம் “பூகி கண்டத்  வயஸஸரஸ ஸ்நிக்தநீரோபகண்டாம் ஆவிர்மோத ஸ்திமிதஶகுநாநூதிதப்ரஹ்மகோஷாம் | மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப்பட்டுக்கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து “அடியேனுக்குத் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருளவேணும்” என்று மிகவும் அநுவர்த்திக்க, பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து ‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது; ஆகையாலே எனக்கு வாய்திறந்தொரு வார்த்தை சொல்லப்போகிறதில்லை. நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக்கோடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே பட்டரளவிலே விரோதித்த வீரஸுந்தரப்ரஹ்மராயனுக்கு ஶரீரவிஶ்லேஷமாக, அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத்தாயாரான ஆண்டாளை ஸேவித்துக்கொண்டு எழுந்தருளியிருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள் பட்டருடைய விரோதி போகையாலே திருப்பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு, நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி திருமாளிகைக்குள்ளே புகுந்து திருக்காப்பைச்சேர்த்து தாளையிட்டுக் கொண்டு வயிற்றைப்பிடித்து வாய்விட்டழுதாள்; அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து ‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும், நாமெல்லாரும் கண்டு வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன, அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச்செய்தபடி:- பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்கிறவன் நேரே ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர்திறத்தில் மஹாபராதத்தை தீரக்கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருளவேணும்’ என்று பட்டர் திருவடிகளிலே தலைசாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப்போனான். ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர்கையிலே அகப்பட்டுக்கலங்கி அடியுண்டு மலங்க விழிக்கிறான் என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச்செய்தார். ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.

அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழமண்டலத்திலே எழுந்தருளியிருக்கும் கடக்கத்துப்பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசியாண்டான் தாமும் மேல்நாட்டிலே எழுந்தருளியிருந்து  ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள, சோமாசியாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப்பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத் தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச்செய்கிற ஶ்ரீபாஷ்யம் முதலான பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழமண்டலத்துக்கு எழுந்தருளுவதாக அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லையறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழிவிட்டு மீண்டு எழுந்தருளுகிறபோது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்தவாறே அடியேனுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிராநின்றது. அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை ப்ரஸாதித்தருளவேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க, அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசியாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய், ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரேயாகிலும் சாற்றியிருக்கிற திருப்பரிவட்டத்தலையிலே பாகவதாபசாரநிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று அருளிச்செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.

‘ப்ராதுர்பாவைஸ்ஸுரநரஸமோ தேவதேவஸ்ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா| கிந்து ஶ்ரீமத் புவநபவநத்ராணதோந்யேஷு வித்யாவ்ருத்தப்ராயோ பவதி விதவாகல்பகல்ப: ப்ரகர்ஷ:”, “அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்திசிந்தநம்| மாத்ருயோநி பரீக்ஷாயாஸ்துல்யமாஹுர்மநீஷிண:”, “அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந்மத்பக்தேஷுசமாம் த்ருஹந்| விஷதக்தைரக்நிதக்தைராயுதைர்ஷந்தி மாமஸௌ”, “யா ப்ரீதிர்மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே| அவமாநக்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத்”, மத்பக்தம் ஶ்வபசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: | பத்மகோடிஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு. “சண்டாலமபி மத்பக்தம் நாவமந்யேத புத்திமாந்| அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”, “அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேயஶதாநி ச| நிஷ்க்ருதிர்நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”, “ஶூத்ரம்வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வபசம் ததா| ஈக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”, “அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீநஜந்மந:| மத்பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ்சண்டாலதாம் வ்ரஜேத்”, “அபிசேத்ஸுதுராசாரோ பஜதே மாதநந்யபாக்| ஸாது ரேவ  ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”, “ஸர்வைஶ்ச லக்ஷணைர்யுக்தோ நியுதஶ்ச ஸவகர்மஸு| யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:” “அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி, “நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும்”, “ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச்செய்வர்”, “அவமாநக்ரியா”, “பாகவதாபசாரந்தான் அநேகவிதம்; அதிலேயொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம். இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம். அத்தை மாத்ருயோநி பரீக்ஷையோடொக்கும் என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”, “த்ரிஶங்குவைப்போலே கர்மசண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய்விடும்”, “ஜாதிசண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதையுண்டு; அதுவுமில்லை இவனுக்கு ஆரூடபதிதனாகையாலே”.

“திருவுடைமன்னர், செழுமாமணிகள், நிலத்தேவர், பெருமக்கள், தெள்ளியார், பெருந்தவத்தர், உருவுடையார், இளையார், வல்லார், ஒத்துவல்லார், தக்கார், மிக்கார், வேதவிமலர், சிறுமாமனிசர், எம்பிரான்தன சின்னங்கள்” என்று நங்குலநாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திருநாமம் சாற்றுகையாலே கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம். “தஸ்யப்ரஹ்மவிதாகஸ:”, “நாஹம் விஶங்கே ஸுரராஜவஜ்ராநந த்ர்யக்ஷஶுலாந் ந யமஸ்ய தண்டாத்| நாக்ந்யர்க்கஸோமா நாலவித்தஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”. ப்ரஹ்மவிதோபமாநாத் “ஆயுஶ்ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச| ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”, “நிந்தந்தியே பகவதஶ்சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்மஷௌகாந்| தேஷாம் யஶோதநஸுகாயுரபத்யபந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”, “அப்யர்ச்சயித்வா கோவிந்தம்  ததீயாந் நார்ச்சயந்தி  யே| ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”, ‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”, “வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:| ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”, “இவ்விடத்திலே வைநதேயவ்ருத்தாந்தத்தையும், பிள்ளைப்பிள்ளையாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”. இப்படி ஆசார்யாபசாரமும், தத்பக்தாபசாரமும் அதிக்ரூரமென்று வேதஶாஸ்த்ரபுராணாதிகளும், அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதாதர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும் நம் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப்போலே ஒன்பதின்கால் சொல்லிக் கையெடுத்து ஒருமிடறாகக் கூப்பிடுகையாலே ஆஸ்திகனாய், உஜ்ஜீவநபரனாய் இருக்குமவன் மறந்து ஒருகாலத்திலும், ஒரு தேஶத்திலும் , ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள இவ்விஷயங்களை கிஞ்சித்மாத்ரமும் நெகிழநினைக்கக் கடவனல்லன். நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிடவொண்ணாதாப்போலவும், கடலுடைந்தால் அடைக்கவொண்ணாதாப் போலவும், மலைவிழுந்தால் தாங்கவொண்ணாதாப் போலவும் இது அப்ரதிக்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச் செய்தருளுவர். ஆகையாலே ஸதாசார்ய – தத்துல்ய- விஷயங்களை கிஞ்சிந்மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment