தத்வ த்ரயம் – அசித் – வஸ்து ஆவது எது?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

தத்வ த்ரயம்

<< சித் – நான் யார்?

  • முந்தைய கட்டுரையில் நாம் சித் தத்வத்தின் இயல்பைப் பார்த்தோம் (https://granthams.koyil.org/2017/09/26/thathva-thrayam-chith-who-am-i-tamil/) .
  • இப்போது நம் பயணத்தைத் தொடர்ந்து “தத்வத்ரயம்” எனும் பிள்ளை லோகாசார்யரின் சென்னூலின் மூலமாகவும் அதற்கு மணவாள மாமுனிகள் அருளிய சிறப்பான வ்யாக்யானம் மூலமாகவும் சித் அசித் ஈச்வரன் எனும் மூன்று தத்துவங்களை அறிவோம்.

ஆசார்யர்கள் உபதேசம் மூலம் அசித் (வஸ்து) தத்வம் அறிந்து கொள்ளுதல்

முகவுரை

  • அசித் அறிவற்றது. மாற்றம், பரிணாமத்துக்குரியது
  • அதற்கு ஞானம் இல்லாததால் அது பிறர் பயன்பாட்டுக்கே இருக்கிறது
  • அறிவுள்ள மாற்றங்களற்ற சித்தைப் போலன்றி அசித் மாற்றங்களுக்குட்பட்டதாய் இருக்கிறது
  • அசித் மூவகைப் படும்:
    • சுத்த ஸத்வம் – ராஜஸம் (கோபதாபங்கள்), தாமஸம் (அறியாமை/அஞ்ஞானம்) கலவாத நல்லியல்பு
    • மிச்ர ஸத்வம் ராஜசமும் தாமஸமும் கலந்த நல்லியல்பு
    • ஸத்வ சூந்யம் – கால தத்வம். இது ஸத்வம் ராஜஸம் தாமஸம் எதுவுமற்றது

சுத்த ஸத்வம் (தூய நல்லியல்பு)

பரம பதம்-திவ்ய வஸ்துக்களால் ஆன மண்டபங்களும் பொழில்களும் நிறைந்த, ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய ஆஸ்தாநம்

 

  • ரஜஸ்ஸும், தமஸ்ஸும் கலவாத தூய சுத்த ஸத்வம் இது. பரமபதத்தில் இருப்பவைகளைப் பற்றியே இப்பகுதி.
  • இயல்பாகவே இது
    • நித்யமானது
    • ஞானம் ஆனந்தம் இரண்டின் மூல ஆதாரம்
    • கர்ம வச்யரான மனிதர்களால் அல்லாமல் பகவானின் இச்சாதீனமாக நிர்மாணமான கோபுரங்கள்/மண்டபங்கள் நிறைந்தது
    • அளவற்ற ஒளி/தேஜஸ் கொண்டது
    • நித்யர், முக்தர்களாலும் ஏன் பகவானாலும் அளவிட முடியாதது. அவ்வாறெனில் எம்பெருமானின் ஸர்வஞத்வத்துக்குக் குறைவு வாராதோ எனும் ஸம்சயத்துக்கு மாமுனிகள் அழகாக ஸமாதானம் கூறுமுகமாக எம்பெருமானும் இதன்  மஹிமையை அளப்பரியது என அறிவான் என்றார்.
    • மிக அத்புதமானது
  • சிலர் இது ஸ்வயம் ப்ரகாசம் (தானே ஒளி விடக்கூடியது) என்பர், சிலர் அவ்வாறு அன்றென்பர். இப்படி இரு கருத்துகளுண்டு.
  • ஒளி விடக்கூடியதென்னும் கருத்து வலிது. ஆகில் அது தன்னை நித்யர் முக்தர் ஈச்வரனுக்கு காட்டிக் கொடுக்கும். ஸம்ஸாரிகளுக்குத் தெரியாது.
  • இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது. ஏனெனில்
    • இதற்குத் தன்னைத் தெரியாது
    • இது பல வடிவுகளில் மாறும்
  • இது ஞானத்தினின்று வேறுபட்டது ஏனெனில்
    • பிறர் உதவியின்றி வெவ்வேறு வடிவங்களை மேற்கொள்கிறது (ஞானம் உருவம் மேற்கொள்வதில்லை)
    • தன்மாத்திரைகளை (ஒலி ஸ்பர்சம் வடிவம் ருசி/சுவை மணம்) கிரஹிக்கும் ஞானம் போலன்றி இது நுண் உணர்வுகளின் இருப்பிடம்

மிச்ர ஸத்வம் (தூய்மையற்ற நல்லியல்பு)

  • ஸ்வாபாவிகமாகவே இது
    • ஸத்வம் ரஜஸ் தமஸ்ஸுகளின் கலவை ஆகும்
    • ஜீவாத்மா முழு ஞானமும் ஆனந்தமும் உறாமல் தடுக்கும் திரை
    • ஜீவாத்மாவுக்கு முரண்பட்ட ஞானம் ஏற்படும் மூலாதாரம்
    • நித்யம்
    • ஈச்வரனின் லீலைகளில் ஓர் உபகரணம்
    • தனக்குள்ளும், பிரவற்றோடும் வேறுபட்டு தன் ஸ்வரூபத்துக்கேற்ப  (அவ்யக்தமாயும் வ்யக்தமாயும் ச்ருஷ்டி ஸம்ஹார காலங்களில்) இருக்கும்.
    • ப்ரசித்தமான பெயர்கள்
      • ப்ரக்ருதி – மாறுதல்கள் மூலமாய் இருப்பதால்
      • அவித்யை – உண்மை ஞானத்துக்கு மாறுபட்டிருப்பதால்
      • மாயா – மாறுபட்ட வேறுபட்ட விசித்ர விஷயங்களாக இருப்பதால்
  • நம்மாழ்வார் திருவாய்மொழி 10.7.10ல் அருளிச் செய்தவாறு அசித் தத்துவங்கள் உள்ளன
    • பஞ்ச தன்மாத்திரைகள் –  சப்த (ஒலி), ஸ்பர்ச (தொடுவுணர்வு), ரூப (பார்வை), ரஸ (சுவை), கந்தம் (நாற்றம்)
    • பஞ்ச ஞானேந்த்ரியங்கள் – அவற்றை அறியும் ச்ரோத்ர (செவி), த்வக் (சருமம்), சக்ஷுர் (கண்கள்), ஜிஹ்வா (நாக்கு), க்ராண(காதுகள்) எனும் அறிவுப் புலன்கள்
    • பஞ்ச கர்மேந்த்ரியங்கள் – வாக் (வாய்), பாணி (கைகள்), பாத(கால்கள்), பாயு (மலத்துவாரங்கள்), உபஸ்த (இனப்பெருக்க உறுப்புகள்)
    • பஞ்ச பூதங்கள் – ஆகாசம் (வெளி), வாயு (காற்று), அக்னி (நெருப்பு), ஆப/ஜலம் (நீர்), ப்ருத்வி (நிலம்)
    • மனஸ் – மனம்
    • அஹங்காரம்
    • மஹான் – வஸ்துவின் திரண்ட உரு நிலை
    • மூலப்ரக்ருதி – வஸ்துவின் உருவிலா நிலை
  • இவற்றுள் அடிப்படைப் பொருளான மூலப்ரக்ருதி குணங்களின் கூட்டரவால் வெவ்வேறு நிலைகளை எய்தும்
  • குணங்கள் ஸத்வம் (நல்லியல்பு), ரஜஸ் (உணர்ச்சிப்பெருக்கு), தமஸ் (அறியாமை) என மூவகை
  • ஸத்வம் ஆனந்தம் மகிழ்ச்சிகளைத் தூண்டும்
  • ரஜஸ் பற்றுதல், பொருளாசைகளை விளைக்கும்
  • தமஸ் முரண்பட்ட ஞானம், அறியாமை, மறதி , சோம்பலை விளைக்கும்
  • இம்மூன்று இயல்புகளும் ஸமமாய் உள்ளபோது வஸ்து உருவற்ற நிலையில் இருக்கும்
  • இம்மூன்று இயல்புகளும் ஸமமற்ற நிலையில் உள்ளபோது வஸ்து உருவ நிலையில் இருக்கும்
  • வஸ்துவின் முதல் உருவான நிலை மஹான்
  • மஹானிலிருந்து அஹங்காரம் பிறக்கிறது
  • பின்னர் மஹான், அஹங்காரங்களிலிருந்து தன்மாத்ரைகள், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் தோன்றும்.
  • பஞ்ச தன்மாத்ரைகள் பஞ்ச பூதங்களின் ஸூக்ஷ்ம நிலை
  • எம்பெருமான் இவ்வேறுபட்ட மூலகங்களைக் கலந்து ப்ரபஞ்சத்தை சிருஷ்டி செய்கிறான்
  • பகவான் தன் ஸங்கல்பத்தால் ப்ரபஞ்சம் ஆகிய கார்யத்தை இம்மூலகங்களாகிய காரணத்தை இட்டு மாற்றுவதாகிய ஸ்ருஷ்டியைச் செய்கிறான்
  • ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்வாழிகளையும் பகவான் ப்ரஹ்மா ப்ரஜாபதி போன்ற பிற உயிர் வாழிகளுக்குத் தான் அந்தர்யாமியாக இருந்து கொண்டு ஸ்ருஷ்டி செய்கிறான்
  • கணக்கற்ற ப்ரபஞ்சங்கள் உள
  • இவை யாவும் ஒரு சேரவும் அநாயாஸமாகவும் அவன் ஸங்கல்பத்தால் ஸ்ருஷ்டி செய்யப்படுகின்றன
  • பல்வேறு பிரமாணங்களை உதாஹரித்து மாமுனிகள் பதினான்கு தளங்களாக, அண்ட கோளங்கள் உள எனக் காட்டுகிறார்

லீலா விபூதி அமைப்பு (ஸம்ஸாரம் – இவ்வுலகு)

  • கீழ் ஏழு நிலைகள்
    • மேலிருந்து அவை அதலம், விதலம், நிதலம், கபஸ்திமத்(தலாதலம்), மஹாதலம், சுதலம், பாதாலம் எனப்படும்
    • இவற்றில் ராக்ஷஸர், பாம்புகள், பறவைகள் முதலியன உள
    • ஸ்வர்கத்தினும் அதிகமாக இன்பம் பயக்கும் மண்டப மாட கூட கோபுரங்கள் இங்கு உள
  • ஏழு மேல் நிலைகள்
    • பூலோகம் – மனிதர் விலங்கினம் பறவைகள் வாழிடம். இவை ஏழு த்வீபங்களாய் உள. நாம் இருப்பது ஜம்பூ த்வீபம்.
    • புவர் லோகம் – கந்தர்வர் (தேவ இசைக்கலைஞர்) வாழிடம்
    • ஸ்வர்க லோகம் – பூலோகம் புவர்லோகம் ஸ்வர்க்க லோகம் மூன்றையும் இயக்கும் இந்த்ரன் தன் மக்களோடுள்ள இடம்
    • மஹர்  லோகம் – ஏற்கெனவே இந்த்ர பதம் வகித்தோரும் இனி வகிக்க இருப்போரும் இருக்குமிடம்
    • ஜன லோகம் – ஸனக ஸநந்தன ஸநத்குமார ஸநாதனாதி ப்ரஹ்ம குமாரர்கள் இருக்குமிடம்
    • தப லோகம் – ப்ரஜாபதிகள் எனும் ஆதி மூல புருஷர்கள் இருக்குமிடம்
    • ஸத்ய லோகம் – ப்ரஹ்மா விஷ்ணு சிவன் தம் அடியார்களோடு வாழுமிடம்
  • ஒவ்வொரு ப்ரபஞ்சமும் பதினான்கு அடுக்குகளால் ஆகி ஏழு ஆவரணங்களால் சூழப்பட்டுள்ளது
  • ஞானேந்த்ரியங்கள் ஸூக்ஷ்மங்களை உணர்கின்றன, கர்மேந்த்ரியங்கள்  ஸ்தூலங்களை உற்றுணர்ந்து செயல்பாடுகளில் இழிகின்றன.
  • மனம் இவை எல்லாவற்றிலும் உடன் இருந்து பொதுவாய் உதவுகிறது.

  • பஞ்சீ கரணம் எனும் வழியால் பகவான் வெவ்வேறு மூலப் பொருள்களை இயக்கி நாம் காணும் ப்ரபஞ்சத்தை நாம் இப்போது காணும் வகையில் சமைக்கிறான்

ஸத்வ சூன்யம் – காலம்

  • இயற்கையில், காலம்
    • வஸ்துக்களை ஸூக்ஷ்ம தசையிலிருந்து ஸ்தூல தசைக்கு  நிலை மாற்றுவதில் ஒரு க்ரியா ஊக்கியாய் உள்ளது
    • வெவ்வேறு அளவுகளில் நாள் கிழமை பக்ஷம் திங்கள் என அமைகிறது
    • நித்யம். இதற்கு ஆரம்பம் முடிவு இல்லை
    • எம்பெருமானின் லீலைகளில் உதவுகிறது
    • இது எம்பெருமானின் திருமேனியின் ஒரு வடிவும் ஆகும்
  • மாமுனிகள் நடுவில் திருவீதி பிள்ளை பட்டரை உதாஹரித்து கால அளவைகளின் விவரங்கள் தந்தருள்கிறார்
    • நிமிஷம் – க்ஷணம் – ஒரு வினாடி – கண்ணை ஒரு முறை இமைக்கும் நேரம்
    • பதினைந்து நிமேஷங்கள் – ஒரு காஷ்டா
    • முப்பது காஷ்டா- ஒரு காலம்
    • முப்பது காலம் – ஒரு முஹூர்த்தம்
    • முப்பது முஹூர்த்தம் – ஒரு திவசம் (நாள்)
    • முப்பது திவசங்கள் – இரண்டு பக்ஷங்கள் – ஒரு மாஸம்
    • இரண்டு மாஸங்கள் – ஒரு ருது ஒரு பருவம்
    • மூன்று ருதுகள் – ஓர் அயனம் – 6 மாஸங்கள் உத்தராயணம், 6 மாஸங்கள் தக்ஷிணாயனம்
    • இரண்டு அயனங்கள் – ஒரு ஸம்வத்ஸரம், வருஷம், ஆண்டு
    • முந்நூற்றறுபது மானிட ஸம்வத்ஸரங்கள் – ஒரு தேவ ஸம்வத்ஸரம்
  • சுத்த ஸத்வம் மிச்ர ஸத்வம் ஆகியவை இரண்டும் இன்புறத்தக்க விஷயங்களாகவும் இன்பத்துக்கு இருப்பிடமாகவும் இன்பத்தத்தைத் தருவிக்கும் உபகரணங்களாகவும் உள்ளன.
  • சுத்த ஸத்வம் (தெய்வீக வஸ்து) மேலும் . பக்கங்களிலும்   எல்லையற்றது, கீழ்ப்புறம் எல்லையுள்ளது, பரமபதம் முழுதும் வ்யாபித்துள்ளது
  • மிச்ர தத்வம் மேற்புறம் எல்லையுள்ளது கீழும் பக்கங்களும் எல்லையின்றி ஸம்ஸாரமாய் விரிந்துள்ளது.
  • கால தத்வம் எங்கும் (பரமபதம், பிரபஞ்சம் இரண்டிலும்) வ்யாபித்துள்ளது
  • காலம் பரமபதத்தில் நித்யம், ஸம்ஸாரத்தில் தாற்காலிகம் என்பர். மாமுனிகள் “தத்வ த்ரய விவரணம்” எனும் நூலில்  பெரியவாச்சான் பிள்ளை ஸாதித்ததை  உதாஹரித்து “காலம் பரமபதம் ஸம்ஸாரம் இரண்டிலும் நித்யம்” என்பர். ஆசார்யர்கள் சிலர் வேறுபட ஸாதிப்பதுண்டு. ஸம்ஸாரம் ஸதா மாறுபடுவதால் காலமும் தாற்காலிகம் என்பர்.
  • சிலர் காலம் இல்லை என்பர். அது ஏற்புடைத்தன்று.

முடிவுரை

இவ்வாறு ஓரளவு அசித் (வஸ்து ) தத்வம் மூவகை – சுத்த ஸத்வம் – பரமபதம். மிச்ர தத்வம் – ஸம்ஸாரம் – இவ்வுலக வஸ்துகள், ஸத்வ சூன்யம் – காலம் எனக் கண்டோம். இவ்விஷயங்களை மிகவும் ஆழ்ந்த அர்த்தங்களை உட்கொண்டவை. இவற்றை ஆசார்யர் திருவடியில் மேலும் கேட்டு உஜ்ஜீவிப்பது. க்ரந்த காலக்ஷேபமாக ஆசார்யரிடம் கேட்டாலே தெளிந்த ஞானம் உண்டாம்.

அடுத்து ஈச்வர தத்வம் அநுபவிப்போம்.

பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2013/03/thathva-thrayam-achith-what-is-matter/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment