ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்
ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||
श्रुत्यर्थ सारजनकं स्मृतीबालमित्रम
पद्मोंल्लसद् भगवदङ्ग्रि पूराण बन्धुम |
ज्ञानाधिराजम अभयप्रदराज पुत्रम
अस्मदगुरुम परमकारुणिकं नमामी ||
(வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)
அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||
अभयप्रदपाद देशिकोद्भवम
गुरुमिडे निजमादरेण चाहम् |
या इहाखिललोक जीवनादर:
चरमोपाय विनिर्णयं चकार ||
(அபயப்ரதபாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய், எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)
பரமகாருணிகரான நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த சரமோபாய நிர்ணயம்
அபயப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத்ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||
अभयपप्रद पादाख्यं अस्मदेशिकमाश्रये ।
यत्प्रसादाद अहं वक्ष्ये चरमोपाय निर्णयम ।।
அஸ்மஜ் ஜநக்காருணயஸுதாஸந்து ஷிதாத்மவான் |
கரோமி சரமோபாயநிர்ணயம் மத்பிதா யதா ||
अस्मज्जनककारुण्य सुधा सन्धुक्षितात्मवान ।
करोमी चरमोपायनिर्णय मत्पिता यथा ॥
அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||
अस्मदुत्तारक वन्दे यतिराज जगद्गुरूम |
यत्कुपाप्रेरित: कुर्मी चरमोपाय निर्णयम ||
பூர்வாபரகு ரூகதைஶச ஸ்வப்நவ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||
पूर्वापरगुरूक्तेश्च स्वप्नवृतैर्यतिशभाक ।
क्रियतेद्य मया सम्यक चरमोपाय निर्णयम॥
உடையவருக்கு முன்புள்ள முதலிகளுடையவும், பின்புள்ள முதலிகளுடையவும் திவ்யஸூக்திகளாலும் அத்யத்புதமான ஸவப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயமானது உடையவரிடத்திலே பூர்ணமாக நிர்ணயிக்கப்படுகையாலே இதுக்குச் சரமோபாய நிர்ணயமென்று திருநாமம் ஆயிற்று.
முதலிகள் தந்தாம் ஆசார்யர்கள் பக்கலிலே ஸாக்ஷாத் ஆசார்யத்வத்தை அறுதியிட்டு அவ்வர்களுடைய அபிமானமே உத்தாரகமென்று சரமோபாயத்தை அறுதியிட்டிருந்தார்களேயாகிலும், தந்தாம் ஆசார்யர்கள் உடையவரேயே உத்தாரகத்வேந அறுதியிட்டுத் தங்களைப் பற்றினார்க்கும் உடையவரயே தஞ்சமாக உபதேசிக்கையாலே, ஸர்வர்க்கும் உத்தாரகத்வேந சரமோபாயத்தை அறுதியிடலாவது உடையவர் பக்கலிலேயிறே.
குருரிதி ச பதம் பாதி என்கிறபடியே ஆசார்யத்வம் ஒளிவிஞ்சிச் செல்லுகிறது உடையவர் பக்கலிலே வ்யவஸ்திதமிறே. வடுகநம்பி வார்த்தையை நினைப்பது.
உடையவர்க்கு முன்புள்ள முதலிகள் பாவ்யர்த்த ஜ்ஞாநமுடையவர்களாகையாலே, பரமகாருணிகரான இவரிடத்திலே உத்தாரகத்வம் நிலை நிற்குமென்று அறுதியிட்டுத் தங்களுக்குப் பேற்றில் குறையின்றிக்கே இருக்கவும் “கலியும் கெடும்” என்கிற ஆழ்வாருடைய திவ்யஸுக்தியை உட்கொண்டு இவரோடு அவிநாபாவ ஸம்பந்தத்தைப் பரமோத்தாரகமென்று நினைத்து இருந்தார்கள். ஸம்பந்தம் தான் த்விவிதமாயிறேயிருப்பது; ஆரோஹண ஸம்பந்தம் என்றும், அவரோஹண ஸம்பந்தம் என்றும். அதில் ஆரோஹண ஸம்பந்தம் ஆசார்யத்வேந படிப்படியாக ஏறிநிற்கும். அவரோஹண ஸம்பந்தம் ஶிஷ்யத்வேந படிப்படியாக இறங்கி வரும். இவை இரண்டுக்கும் விளை நிலம் உடையவரிறே. இதில் ஒன்றுநிரவதிகமாய் ஒன்று ஸாவதிகமாய் இருக்கும்.
அஸாவஸாவித்யாபகவத்த: என்கிறபடியே எம்பெருமானளவும் சென்று கொழுந்திலையாயிருக்குமிறே. மற்றயைது கொழுந்துவிட்டுப் படராநிற்கும். இந்த ஸம்பந்த த்வயந்தான் இடையிட்டு வந்ததொன்றிறே. குருபரம்பரையிலே இடையிடபட்டாரிறே உடையவர். ஒரு முக்தாஹாரத்தில் நடுவே ஒளியுடைய மாணிக்கத்தை அழுத்தி வைத்தால் இருதலையும் நிறம்பெற்று வருமிறே. அப்படியே உடையவரும் இருதலை நாயகமாகக் கொண்டு உபயஸம்பந்திகளுக்கும் ப்ரகாசகரானார். இரண்டு திறத்தார்க்கும் கார்யம் கொள்ளும் போது மத்யஸ்தரைக் கொண்டுகொள்ளவேணுமிறே. நடுச்சொன்னவரிறே மத்யஸ்தராவார். நாம் பற்றினாலும் முன் பின்னுற்ற ப்ரகாரம் கார்யம் தலைக்கட்டுமிறே பதத்ரயத்துக்கும் மத்யமபதம் போலே ஆயிற்று.
இவர் இங்கிருக்கும் படி அதாவது – மகாரமான நாரபதவாச்யர்க்கு இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களைப் பண்ணிக்கொடுக்கவற்றான எம்பெருமானுடைய உபாயபாவத்தை காட்டுகிறது மத்யம்பதம். அப்படியே உடையவரும் – குருபரம்பரைக்கிடையிலிருந்து ஸம்பந்த
த்வயத்துக்கும் கார்யோபயோகியான தம்முடைய ஆசார்யத்வேந உத்தாரகத்வத்தை விஶேஷேண வெளியிட்டுக் கொண்டு விஶ்வஸநீயராயிறேயிருக்கிறது இத்தையிட்டாயிற்று.
அர்வாஞ்ச: என்று அருளிச்செய்தது இப்படி உத்தாரகமான ஆசார்யத்வந்தான் இரண்டு படிப்பட்டிருக்கும் – ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வம் என்றும், க்ருபாமாத்ர ப்ரஸ்நநாசார்யத்வம் என்றும். இதில் பின்பு சொன்னது க்வாசித்கமாக இருக்கும். அக்ரோக்தமானது பஹுவ்யக்திதமாயிருக்கும். இவனுக்கு பேறு தப்பாதென்று துணிந்து இருக்கலாவது க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ஸம்பந்த்த்தாலேயாயிற்று. எலியெலும்பனாயிருக்கிற இவனுக்கு ஆசார்யன் திருவுள்ளத்துக்கேற்க அநுவர்த்திக்க முடியாதிறே இவ்வர்த்தத்தில் ஆழ்வானுக்கும் ஆண்டானுக்கும் ப்ரஸங்கமாக ஆழ்வான் அறுதியிட்ட வார்த்தையை நினைப்பது. “மத்தகத்துத் தன்தாளருளாலே வைத்த அவா” என்ற அவர் அருளிச்செய்கையாலே, அருளாளப் பெருமாள் எம்பெருமானார் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யன் முக்யனென்று அறுதியிட்டார் என்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச்செய்வர்.
ப்ரதம்பர்வத்தில் பரகதஸ்வீகாரம் போலே சரமபர்வத்திலும் பரகதஸ்வீகாரமே இவனுடைய பேற்றுக்கு முக்யமான உபாயமென்று அருளிச்செய்வர்.
யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீயகாருண்ய குணேந பாதி | ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.
இப்படி முக்கியமான க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் க்வாசித்கமானவிடத்திலும் உத்தாரகத்வ விஶிஷ்டமாயிருக்கும். அதுவும் ம்ருக்யமாயிருக்கும். உத்தாரகத்வ விஶிஷ்டமான க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் பூரணமாக கடவது உடையவர் பக்கலிலேயிறே.
ஸ்வாநுவ்ருத்தியினாலே நம்பியை ப்ரஸன்னராம்படி பண்ணி வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தை தாம்மேல் விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே. ராஜ மஹேந்தரப் பெருமாள் அரையருக்கு அரங்கமாளிகை என்று குமாரருண்டாய், அவர் பித்ருவசனாத்யுல்லங்கநம் பண்ணி அவிநீதராய்த் திரிகிற நாளிலே உடையவர் அறிந்தருளி, ஶ்ரீ பாதத்திலுள்ளவர்களை அழைத்தருளி வலியப்பிடித்துக் கொண்டு வரச் சொல்லி அருளிச்செய்ய, அவர்களும் அபிமதஸ்தலத்தில் நின்றும் பிடித்துக்கொண்டு வந்து திருமுன்பே விட, உடையவரும், “ பிள்ளாய்! நம்மோடு ஒட்டற்று நீ திரிந்தாலும் நாமுன்னை விட்டுக்கொடுப்பதில்லை காண் “ என்று பேரருளாளர் ஸந்நதியிலே அழைத்துக்கொண்டு எழுந்தருளித் திருக்காப்பை அடைத்து திரிய ஒரு வட்டம் பகவத் ஸம்பந்தம் பண்ணியருளி, ரஹஸ்யார்த்தத்தையும் ப்ரஸாதித்து அருளி, தம்முடைய திருவடிகளிரண்டையும் அவர் தலையிலே வைத்து அருளி, “ நீ பற்றிப் போந்த காலுக்கும் நம்முடைய காலுக்கும் வாசி கண்டாயே? அது நரகாவஹம், இது மோஷாவஹம். இத்தையே தஞ்சமாக நினைத்திரும்” என்று பூர்ணமாக கடாக்ஷித்துத் திருவடிகளைக் காட்டி அருளினார். அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போந்தவராய் இந்த ரஹஸ்யத்தைப் பிள்ளை அடியேனுக்கு அருளிச் செய்து, உடையவர் திருவடிகளையே தஞ்சமாக காட்டி அருளினார். அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போருவன் உடையவருடைய உத்தாரகத்வ விஶிஷ்டமான க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்துக்கு இவ்விரண்டு வ்ருத்தாந்தமும் ப்ரமாணமாக அத்யவஸிக்கப்போரும் அறிவுடையார்க்கு இன்னமும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்கைக்காக உடையவர்க்கு முன்புள்ள முதலிகளுடைய திவ்ய ஸூக்திகளும் ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களும் பரக்க ப்ரதிபாதிக்கப்படுகிறது மேல்.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
In English – https://granthams.koyil.org/2012/12/charamopaya-nirnayam-invocation/